திருவனந்தபுரம், ஆக.2- கோவிட் நெருக்கடி இருந்த போதிலும் கேரளத்தில் தொடக்க நிறு வனங்கள் (ஸ்டார்ட்அப்) தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. கேரளத்தின் ஸ்டார்ட் அப்புகள் இந்த ஆண்டு ஜூலை வரை ரூ.329 கோடி முதலீடு செய்துள்ளன. கோவிட் தற்காப்புக்கான கண்டுபிடிப்புகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன. 15க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோவிட் தற்காப்பு கருவிகளை படைத்துள் ளன. இந்த தயாரிப்புகள் உலக அள வில் கவனத்தை ஈர்த்துள்ளதால் முத லீடு அதிகரித்துள்ளது. இந்த தயா ரிப்புகளை கோவிட் தற்காப்புக்காக கேரள அரசும் பயன்படுத்தியது. இவை முகக் கவசங்கள், முகமூடி கள் மற்றும் மொபைல் பயன்பாடு கள் முதல் ரோபோக்கள் வரை பல் வேறு தொடக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. கேரள அரசு பயன்படுத்தும் ஜிஒகே நேரடி மொபைல் அப்ளிகேசன் கியோ காப்பி என்கிற ஸ்டார்ட் அப் நிறுவன தயாரிப்பாகும். வீட்டிலிருந்தே மருத்து வரின் உதவியை பெறும் ‘கியுக் டாக்டர் கியுக்’ (Quick Doctor Quick) டிஆர் ஹெல்த்கேர் லிமிட்டெட் வடிவமைப்பு செய்ததாகும். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இதை பயன்படுத்தினர்.
கோவிட் நோயாளி களையும் முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்பு நோயாளிகள், கண்கா ணிப்பில் உள்ளவர்களது விவரங்கள் வழங்கும் ஆப் வெளியிட்டது தாட் ரிப்பிள்ஸ் என்கிற நிறுவனம் ஆகும். பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதாரத் துறை மற்றும் ஐ.டி மிஷன் இந்த ஆப்பை பயன்படுத்துகின் றன. தனிமை வார்டுகளில் பயன் படுத்தப்படும் ரோபோட்டுகளை அஸி மோவ் ரோபோடிக்ஸ் உருவாக்கியது. இந்த ரோபோக்களை சுகாதா ரத்துறை பயன்படுத்துகிறது. என் 95 முகக்கவசம், வென்டிலேட்டர், தெர்மல் ஸ்கிரீனர், முக மூடி, முகக் கவசம் நீக்கும் இயந்திரம் போன்ற வற்றை ஸ்டாட்டப்புகள் உரு வாக்கின. ஐபோசம், விஎஸ்டி, அவ தார், ஹீ டிசைன், ஜீவவாயு போன்ற ஸ்டார்ட்அப்கள் பல்வேறு தயாரிப்பு களை அறிமுகப்படுத்தியுள்ளன. எல்டிஎப் அரசு நான்கு ஆண்டு கள் கடந்துள்ள நிலையில் பல்வேறு ஸ்டார்ட் அப்புகளின் மூலம் ரூ. 1539 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்த வருட துவக்கத்தில் கள மசேரியில் உள்ள ஒருங்கிணைந்த ஸ்டாட்அப் வளாகத்தில் தொடங்கப் பட்ட சூப்பர் பேப் ஆய்வகம் அமெ ரிக்காவுக்கு வெளியே துவக்கப்பட்ட முதலாவது ஆய்வகமாகும். யுடிஎப் ஆட்சியின் போது 300 ஸ்டார்ட்அப்பு கள் பதிவு செய்யப்பட்டன. இப்போத அந்த எண்ணிக்கை 2865 ஆக உயர்ந்துள்ளது. இன்குபேட்டர்களின் எண்ணிக்கை 18 லிருந்து 42 ஆகவும், ஆக்சிலேட்டர்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து ஆறாகவும் உயர்ந் துள்ளது. யுடிஎப் ஆட்சி காலத்தில் 15 ஸ்டார்ட்அப்புகள் சர்வதேச ஒத்து ழைப்பு பெற்றன. இப்போது 130 சர்வ தேச ஒத்துழைப்புகள் கிடைத்துள் ளன.