திருவனந்தபுரம் உட்பட ஆறு விமான நிலையங்களை அதானி குழுமத்தி ற்கு தருவதற்கு மோடி அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. திரு வனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு தருவதை கேரள மக்கள் கடுமையாக எதிர்க் ்கின்றனர். மக்களின் எதிர்ப்பை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசாங்கம் பிரதிபலிக்கும் வகையில் மோடி அரசாங்கத் துக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் மயத்துக்கு எதிராக கேரள இடதுஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் நிலைபாடு வெறும் கேரள பிரச்சனை மட்டுமல்ல; பொதுத்துறையா அல்லது தனியார்துறையா எனும் கேள்வி மட்டுமல்ல; அதனையும் தாண்டி நவீன தாராள மய பொருளாதார கொள்கைகளா அல்லது மக்கள் அதரவு கொள்கைகளா எனும் முரண் பட்ட கோட்பாடுகளுக்கு இடையே நடக்கும் போராட்டம். நவீன தாராளமய கொள்கை களை எதிர்க்கும் திராணியுள்ள ஒரு மாநில அரசாங்கம் மற்றும் மக்களின் போராட்டம்.
அதானி குழுமம் சரியான தேர்வா?
திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு தருவது எனும் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பொழுதே கேரளா அரசாங்கம் அதனை எதிர்த்தது. எனினும் டெண்டர்விடப் பட்ட பொழுது கேரளா தொழில் வளர்ச்சி கழகம் டெண்டரில் பங்கேற்றது. முதல் வினோதம் இந்த டெண்டர் விதிமுறைகளில் வெளிப் பட்டது. விமான நிலையம் போன்ற பெரிய கட்ட மைப்பு திட்டங்களில் பங்கேற்கும் நிறுவனங் களுக்கு முன் அனுபவம் தேவை என்பது மிக முக்கிய முன்நிபந்தனையாக இருக்கும். இந்த விதி டெண்டரில் இல்லை. ஏன்? ஏனெனில் அதானி குழுமத்துக்கு விமான நிலையம் நடத்திய அனுபவம் அறவே இல்லை. அங்கேயே கூட்டு களவாணி செயலுக்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டது. இந்த டெண்டரில் கேரளா அரசாங்கம்/ ஜி.எம்.ஆர். குழுமம்/அதானி குழுமம் ஆகிய மூன்றும் பங்கேற்றன. கேரளா அரசாங்கத்து க்கு கொச்சி மற்றும் கண்ணூர் விமான நிலை யங்கள் நடத்தும் அனுபவம் இருக்கிறது. அநேக மாக விமான நிலையங்களை நடத்தும் மாநில அரசாங்கம் கேரளா மட்டும்தான்! ஜி.எம். ஆர். குழுமத்துக்கு ஹைதராபாத்/தில்லி/ கோவா ஆகிய விமான நிலையங்களை நடத்தும் அனு பவம் உள்ளது. ஆனால் அதானி குழுமத்துக்கு அனுபவம் அறவே இல்லை. டெண்டர் விதி களில் ஏன் இந்த விதி இல்லை என்பது வெள்ளிடை மலை! அனுபவமே இல்லாத அதானி எப்படி டெண்டரை பெற்றார்? முதல்வர் பினராயி விஜயன் ஒரு கூட்டத்தில் பேசினார்: “அதானிக்கு விமான நிலையம் எப்படி நடத்துவது என்று தெரியாது; ஆனால் மோடியை நன்றாக தெரியும்” இதனைவிட கூட்டுகளவாணித்தனத்தை கூர்மையாக வெளிப்படுத்த முடியுமா? நியாய மான போட்டி எனும் முதலாளித்துவத்தின் விதியை கூட கூட்டு களவாணி முதலாளித்து வம் மதிப்பது இல்லை.
சரியான பொருளாதார முடிவா?
இந்த டெண்டரில் ஜி.எம் ஆர். குழுமம் ஒரு பயணிக்கு ரூ. 65/- அரசுக்கு தருவதாகவும் அதானி குழுமம் ரூ.168 தருவதாகவும் கூறின. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அனுபவம் வாய்ந்த ஜி.எம்.ஆர். ரூ.65 என முன்வைக்கும் பொழுது அதானி ரூ.168 தரு கிறேன் என கூறுவது ஒன்று அதானி குழுமம் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது விமான சேவை குறித்த புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து ஆகும். எனினும் அதானி குழுமம் முட்டாள்கள் அல்ல! கேரள அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அவர்களின் விலையை பின்னுக்கு தள்ள அதிகபட்ச விலை முன்மொழிந்திருக்கலாம். அதே சமயத்தில் டெண்டர் எடுத்த பிறகு தனக்கு நட்டம் வந்தால் விலையை குறைக்க நிர்ப்பந்தம் செய்து கொள்ளலாம் எனவும் அதானியின் கணக்காக இருக்கலாம். இதற்கு முன்மாதிரிகள் உள்ளன. பல மாநிலங்களில் மின் நிலையங்களை டெண்ட ரில் எடுத்த அம்பானி/ அதானி/ டாட்டா ஆகிய குழுமங்கள் இந்தோனேஷியா அரசாங்கம் நிலக்கரியின் விலையை ஏற்றிவிட்டதால் தாம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலையை அதி கரிக்க வேண்டும் என கோரினர்.
அவ்வாறு விலை அதிகரிக்காத திட்டங்களிலிருந்து வெளி யேறிய உதாரணங்களும் உண்டு. அப்பொழு தெல்லாம் மக்களின் நலன் குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை. தமது இலாபம் மட்டுமே கவனித்தனர். கேரளா அரசாங்கம் டெண்டரில் ஒரு பய ணிக்கு ரூ.135 என முன்வைத்தது. எனினும் பின்னர் மத்திய அரசாங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் அதானி குழுமம் முன்வைத்த ரூ.165ஐ தருவதாக கேரளா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கு பின்னரும் கூட அதானி குழுமத்துக்கு விமான நிலையம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. சரியான பொருளாதார நடவடிக்கை எனில் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? அதானியின் விலை நடைமுறை சாத்தியமா என ஆராய்ந்திருக்க வேண்டும். அல்லது அதிகபட்ச விலை தேவை எனில் கேரளா அரசாங்கத்தின் ஆலோசனையை ஏற்று இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண் டால் மத்திய அரசாங்கத்துக்கு அதிகபட்ச வரு மானமும் கிடைக்கும்; விமான நிலையமும் பொதுத்துறையில் அதாவது கேரளா அர சாங்கத்தின் கையில் இருக்கும். ஆனால் மோடி அரசாங்கத்தின் கணக்கு இது அல்ல! எந்த குறுக்கு வழியிலாவது அதானிக்கு இந்த விமான நிலையம் தரப்பட வேண்டும்.
மோடி அரசாங்கத்துக்கு எதிராக தைரியமான சவால்
இந்த விமான நிலையத்துக்காக 635 ஏக்கர் நிலம் கேரளா அரசாங்கத்தால் தரப்பட்டுள் ளது. இதன் பெரும்பகுதி இலவசமாக தரப்பட்ட தாகும். இப்பொழுது இந்த நிலமும் உள்கட்ட மைப்பு வசதிகளும் 50 ஆண்டுகளுக்கு அதா னிக்கு தரப்படுகிறது. மக்கள் நலனில் கவனம் கொண்டுள்ள எந்த அரசாங்கம்தான் இதனை ஏற்றுக் கொள்ள முடியும்? இது தொடர்பான வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்புக்கு கூட மோடி அரசாங்கம் காத்திருக்க தயாராக இல்லை. 20.08.2020 அன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தவிர அனைத்து அமைப்பு களும் மோடி அரசாங்கத்தின் முடிவை கடுமை யாக விமர்சித்துள்ளன. இதுதான் கேரளா மக்க ளின் எண்ணமும் ஆகும். கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிலையும் இதுவே! எனினும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப் பினர் சசிதரூர் மோடி அரசாங்கத்தின் முடிவை ஆதரித்துள்ளார். இத்தகையவர்களை கொண்டு காங்கிரஸ் எப்படி பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளும் என்பது அந்த கட்சி கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இறுதியில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “கேரளா அரசாங்கத்தின் கோர்வையான நியாயமான வாதங்களுக்கு மதிப்பு அளிக் காமல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இது கேரளா மக்களின் விருப்பத்துக்கு முரண்பட்டது. எனவே இந்த முடிவை அமலாக்குவதில் ஒத்துழைப்பு தருவது கடினமான ஒன்று!” மக்களின் நம்பிக்கையை பெற்ற தைரியமான இடதுசாரி முதல்வர் ஒருவர்தான் இத்தகைய சவாலை மோடி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்க முடியும். சிலர் இதனை பயமுறுத்தல் எனலாம். உண்மையில் இது திருவனந்தபுரம் விமான நிலையத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல! கூட்டு களவாணி முதலாளித்துவத்தை ஆதரிக்கும் காவிமயம் மற்றும் தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கும் மக்கள் நலன் அடங்கிய பொருளாதார கொள்கைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம். நியாயமான உணர்வு உள்ள எவர் ஒருவரும் கேரளா அரசாங்கத் தின் முடிவையே ஆதரிப்பர். - அ. அன்வர் உசேன்