கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருப்பதால், அவர்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ இண்டர்போலை அணுகுகிறது. குற்றவாளிகள் முகமது அஸ்லம் (44), அப்துல் லத்தீப் கே (47), நசிருதீன் ஷா அல்லது நஸ்ரு (32), ரம்ஜான் பரஞ்சேரி என்ற மாற்று பெயர் சபு புல்லாரா (36), முகமது மன்சூர் பி.எஸ். 35 ஆகிய அனைவரும் மலபுரா மற்றும் கோழிக்கோட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். முகமது அஸ்லம் தவிர, குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவராத கைது வாரண்ட் பிறப்பிக்க என்ஐஏ நீதிமன்றத்தை அணுகியுள்ளது. என்ஐஏ அஸ்லாமை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் இன்டர்போல் மூலம் ப்ளூ நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும், என்று என்ஐஏ சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மேலும், ஐந்து நபர்களைச் சேர்த்து, என்ஐஏ பதிவு செய்த வழக்கில் 35 குற்றவாளிகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது அமலாக்க இயக்குநரகம், என்ஐஏ மற்றும் சுங்கத் துறை ஆகியவை விசாரித்து வரும் இந்த வழக்கு, ரகசியமாக மாநிலத்தில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பானது.
14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம், தந்திரமாக தங்கம் கடத்தப்பட்டதை அடுத்து, ஜூலை 5 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.