tamilnadu

509 மையங்களில்  5000 பேருக்கு சிபிஎம் காணொலி அரசியல் உரை

திருவனந்தபுரம், ஜுன் 15-  கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பி னர்கள் 5000 பேருக்கு மாநிலம் முழுவதும் 509 மையங்களில்  ஆன்லைன் ரிப்போர்ட் முதன்முறையாக காணொலி காட்சி யாக நடத்தப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்தி ரன் பிள்ளை, மாநில் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்  ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து பல்வேறு விசயங்க ளை ரிப்போர்ட் செய்தனர். மத்தியக்குழு உறுப்பினர் எம்.வி. கோவிந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.என்.பால கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மாவட்டக்குழு, வட்டா ரக்குழு உறுப்பினர்களும், உள்ளூர் செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர். உள்ளூர், கிளை மட்டத்திலான ரிப்போர்ட்டிங் தொடர்ந்து வரும் நாட்களில் ஆன்லைன் மூலம்  நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.