திருவனந்தபுரம், ஜுலை 30- கேரளத்தில் புதனன்று 903 பேருக்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. தொடர்பு மூலம் 706 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதில் 35 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியவில்லை. கேரள சுகாதாரத்துறை புதனன்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது: கோவிட் உறுதி செய்யப் பட்டோரில் 90 பேர் வெளிநாடுகளில் இருந் தும், 71 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள்.சுகாதாரத்துறையினர் 30 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 641 பேர் புத னன்று குணமடைந்தனர். இதுவரை குண மடைந்தோர் 11,369 பேர். நோய் பாதிப்புக்கு உள்ளாகி தற்போது சிகிச்சை பெறுவோர் 10,350 பேர். கோவிட் நோய் தாக்குதலுக்கு உள்ளான மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் (67) உயிரிழந்தார். இதுவரை கேர ளத்தில் 68 பேர் உயிரிழந்தனர். பல்வேறு மாவட்டங்களில் 1,47,132 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் 1,37,075 பேர் வீடுகள்/ நிறுவனங்களிலும், 10,057 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். புதனன்று நோய் அறிகுறிகளுடன் 1,475 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 23, 924 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. இதுவரை மொத்தம் 7,33,413 மாதிரி கள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில் 7,037 பேரின் பரிசோதனை முடிவு கள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத் துறை யினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற் றும் சமூக நெருக்கமுள்ள 1,19,019 முன்னு ரிமை பிரிவினரில் நடத்தப்பட்ட பரிசோத னையில் 1,14,666 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 19 புதிய கட்டுப் பாட்டு பகுதிகள் கண்டறியப்பட்டன. 13 பகு திகள் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கப்பட் டன. தற்போது 492 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.