திருவனந்தபுரம், ஜூலை 26- கேரளத்தில் ஒரே நாளின் அதிக அள வாக சனிக்கிழமையன்று 1103 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 838 பேர், வெளிநாடு களில் இருந்து வந்தோர் 119 பேர், இதர மாநிலங்களில் இருந்து வந்தோர் 103 பேர். தொற்றிடம் அறியாதோர் 72 பேர், 21 சுகாதார ஊழியர்களுக்கு நோய் தொற்று உறுதியானது. நோயிலிருந்து குணமடைந்தோர் 1049 பேர். உயிரி ழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9420 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8613 பேர் கோவிட்டிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,54,300 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,45,319 பேர் வீடு/ நிறுவன கண்கா ணிப்பிலும், 8981 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். சனி யன்று மட்டும் 1151 பேர் மருத்தவமனை களில் அனுமதிக்கப்பட்டனர்.