tamilnadu

img

கேரளச் செய்திகள் நிவாரண நிதி திரட்டவும் முட்டுக்கட்டை கேரள எதிர்கட்சி மீது முதல்வர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஜுன் 30- நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சி எதிர்த்தது. நிவாரண நிதிக்கு நிதி திரட்டும் முயற்சிகள் கூட முறியடிக்கப்பட்டன. கோவிட் காலத்தில், அரசாங்க அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பங்கை ஒத்திவைக்க முயன்றபோது கூட அந்த உத்தரவு எரிக்கப்பட்டது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திங்களன்று மாலை கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: கோவிட்டுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது மற்ற நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றி அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை கெடுவாய்ப்பாக எதிர்க்கட்சி அந்த வழியில் நகரவில்லை. அரசாங்கத்தை எதிர்ப்பது நியாயமானதே. ஆனால் அரசாங்கத்தின் கோவிட் எதிர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் எந்தவொரு நடவடிக்கையையும் தவறாகப் புரிந்துகொள்ளவும் எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. நாடு குட்டிச்சுவரானாலும் பரவாயில்லை அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவரும் சகோதரர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள்.

டெக்னோ பார்க் சுரங்கப்பணியின் போது களிமண் அகற்றப்பட்டபோது இருவரும் அங்கு ஓடிச் சென்று ஊழல் முறைகேடு என்று குற்றம் சாட்டினார்கள். மின்சார வாகன இயக்கம் என்பது அரசாங்கத்தின் கொள்கை. சமீபத்திய காலங்களில் மின்சார வாகனங்களின் நுகர்வை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2022 க்குள் குறைந்தது பத்து லட்சம் மின்சார வாகனங்கள் சாலைகளில் இறக்க வேண்டும் என்பது இலக்கு.  கொள்கை உருவாக்கப்படுவது செயல்படுத்தவே ஆகும். கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்கள் வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். இது ஒரு எண்ணம் மட்டுமல்ல. சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்களைப் அறிந்து திட்டமிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உள்கட்டமைப்பு வளர்ச்சியும் குறிக்கோளாக கொண்டு அரசு செயல்படுகிறது என முதல்வர் கூறினார்.

புதிதாக 121 கோவிட் நோயாளிகள்
கேரளத்தில் திங்களன்று புதிதாக 121 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 78பேர் வெளிநாடுகளில் இருந்தும் 26 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேர ளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 5பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 5244 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரளத்தில் இதுவரை 4311 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. தற்போது சிகிச்சையில் 2057 பேர் உள்ளனர். 180617 பேர் கண்காணிப் பில் உள்ளனர். இதில் 2662 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். திங்களன்று 281 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக முதல்வர் தெரிவித்தார்.