இடுக்கி, ஜுன் 3- இடூக்கி அணையில் ஜூன் மாதத்தில் மிக உயர்ந்த நீர் மட்டம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு செவ் வாய்க்கிழமை பதிவு செய்யப் பட்டது. நீர்மட்டம் 2338 அடியை எட்டியது. திறக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அருகில் வசிப்பவர்களை எச்சரிக்கும் சோதனை முறையிலான முதல் ஒலி (சைரன்) செவ்வாயன்று எழுப்பப்பட்டது. இடுக்கி அணையில் இதற்கு முன்பு 2000 ஜுன் 2 ஆம் தேதி இந்த அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தி ருந்தது. செவ்வாயன்று பகல் 11.20 மணிக்கு முதல் கட்ட சோதனை முறையிலான எச்சரிக்கை ஒலி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை எட்டும் வகையில் புதிய ஒலிப் பான் மூலம் எழுப்பப்பட்டது. புத னன்றும் சோதனை முறையில் ஒலிப்பான் முழங்கியது. மூலமட் டத்தில் நான்காவது ஜெனரேட்டர் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின் உற்பத்தி 90.851 லட்சம் யூனிட்டு களாக அதிகரித்தது. திட்டப்பகுதி யில் 2.4 மி.மீ மழை பெய்தது. இடுக்கி அணை நீர்மட்டம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், நீர்மட்டம் அடைப்பானை (ஷட்டர்) தொட மேலும் 35 அடி நீர்மட்டம் உயர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்.தினேசன் கூறினார். நீர்த்தேக்கத்தின் ஷட் டர் நிலை 2373 அடியாகும்.