மணாமா, மே 6- வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்திற்கு மே 7 முதல் 13 வரை 15 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் 6 நாடுகளிலி ருந்து 2,750 பேர் ஒரு வாரத்திற்குள் கேரளத்திற்கு வர உள்ளனர். துவக்கத்தில் ஏர் இந்தியாவும் ஏர் எக்ஸ்பிரஸும் இந்த சேவையை அளிக்க உள்ளன. சவுதியைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து பயணிக்க உள்ளவர்களுக்கான கட்டணத்தை விமானத்துறை அமைச்சரகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அபுதாபி – கொச்சி ரூ.15,000. துபாய் – கோ ழிக்கோடு ரூ.15,000. தோஹா – கொச்சி ரூ.16,000. பஹ்ரைன் – கொச்சி ரூ.17,000. மஸ்கட் – கொச்சி ரூ.16,000 குவைத் – கொச்சி ரூ.19,000 என கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கட்டணத்தைவிட அதிகமாகும். 200 நபர்கள் ஒரு விமானத்தில் பயணம் செய்தால் தனிமனித இடை வெளியை பின்பற்ற முடியாது. தனி மனித இடைவெளியை பின்பற்றி னால் கட்டணம் இரட்டிப்பாகிவிடும் என விமானத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
யுஏஇ-யிலிருந்து வியாழனன்று புறப்படும் 2 விமா னங்கள் அபுதாபியிலிருந்து கொச்சிக்கும், துபாயிலிருந்து கோழிக்கோடுக்கும் வந்தடையும். யுஏஇ-யிலிருந்து 10, குவைத்திலி ருந்து 5 விமானங்கள் முதல் கட்ட மாக இயக்கப்படுகின்றன. தூதர கங்கள் அளிக்கும் முன்னுரிமை பட்டி யல்படி பயணிகள் அனுமதிக்கப் படுவர். யுஏஇ-யிலிருந்து வியாழ னன்று புறப்பட வேண்டிய பயணிக ளின் பட்டியல் ஏர் இந்தியா எக்ஸ் பிரஸுக்கு செவ்வாயன்று வழங்கப் பட்டதாக அபுதாபி இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வேலை இழந்து குறைந்த வருவாய் ஈட்டுவோர், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா திரும்ப விருப்பம் தெரி வித்து நோர்க்கா இணையதளத்தில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான மலை யாளிகள் பதிவு செய்துள்ளனர். யுஏஇ இந்திய தூதரகத்தல் 1,97,000 இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர். கத்தாரில் 40,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், கத்தாரில் திங்கள் வரை 6,000 பேர் பதிவு செய்திருந்தனர். பஹ்ரைனிலிருந்து நோர்க்கா இணைய தளத்தில் 10,000 பேர் பதிவு செய்துள்ளனர். மற்ற வளைகுடா நாடுகளின் விமானங்க ளுக்கும் அனுமதி வழங்கினால் குறுகிய காலத்தில் அதிகமான நபர்கள் இந்தியா திரும்ப முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது. அது போல் 400 பேர் பயணிக்க வசதியான போயிங் 747 போன்ற பெரிய விமா னங்களை ஏர் இந்தியா பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.