tamilnadu

img

16 காங்கிரஸ், லீக் குடும்பங்கள் சிபிஎம்மில் இணைந்தன

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மாவட்டம் பூவச்சல் பஞ்சாயத்தில் 16 காங்கிரஸ், லீக் குடும்பங்கள் சிபிஎம்மில் இணைந்தன. 

காப்பிக்காடு, உண்டப்பாற, கோட்டாக்குழி, கொண்டியூர், பச்சக்காடு பகுதிகளைச்சேர்ந்த ஊழியர்களும், நிர்வாகிகளும் சிபிஎம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். கொள்ளை நோய் காலத்திலும் கேரளமக்களை அரவணைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் எல்டிஎப் அரசு மற்றும்முதல்வரின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையும், பொய் குற்றச்சாட்டுகள் கூறி கோவிட்டுக்குஎதிரான போராட்டங்கள் போன்றவற்றை தகர்க்க முயற்சிக்கும் எதிர்கட்சியிடம் கோபமாக இருப்பதாகவும், இதுவரை அவர்கள் பணியாற்றிய அமைப்புகளிலிருந்து விடைபெற முடிவு செய்ததாகவும் கூறினர். கொன்னியூரில் நடைபெற்ற கூட்டத்தில், சிபிஎம் காட்டாக்கடா பகுதி செயலாளர் ஜிஸ்டீபன் சிவப்பு சால்வை அணிந்து அவர்களைவரவேற்றார். சி.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். லோக்கல் கமிட்டி செயலாளர் ஸ்ரீகுமார், பஞ்சாயத்து தலைவர் கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;