திருவனந்தபுரம்:
கேரளாவில், நான்கு ஆண்டு களில் 14 பொருட்கள் விலை மாற்றம்இல்லாமல் மக்களுக்கு கிடைக்கின்றன. சப்ளைகோ மூலம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் பொருட்களின் விலை நிலையாக உள்ளன. அரசு இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் மானியங்களுக்காக செலவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றம் இருக்காது என்று எல்டிஎப் அளித்த வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் போது இது கேரளா முன்னிறுத்தும் மாற்றாகும். முதல் மூன்று ஆண்டுகளில் தலா ரூ.200கோடியும், நான்காம் ஆண்டில் ரூ.150கோடியும் மானியமாக வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் இறுதிப்படுத்தப் படவில்லை.ரேசன் கார்டுடன் சப்ளைகோ விற்பனை நிலையங்களுக்கு ஒருவர் வந்தால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே விலையில் சிறுபயிறு ரூ.74, உளுந்து 66, கொண்டைக்கடலை ரூ.43, பெரும்பயறு ரூ.45, துவரம்பருப்பு, பட்டாணி, சுண்டல் ரூ.65, மிளகாய் ரூ.75, சர்க்கரை ரூ.22,தேங்காய் எண்ணெய் ரூ.88, வெல்லம்,பழுப்பு அரிசி, பச்சை அரிசி, ஆந்திர அரிசி ரூ.25. தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் ரூ.88 இல் இருந்து ரூ.92 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொத்தமல்லியின் விலை ரூ.92 ல் இருந்து ரூ.76 ஆக குறைந்தது.
நாடு முழுதும் விலை உயர்வு
கோவிட் நெருக்கடி, வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டில் அத்தியாவசியப்பொருட்களின் விலை இரட்டிப்பாகி யுள்ளது. இந்தியாவில் சாமானியர்களின் முக்கிய உணவான உருளைக் கிழங்கு, வெங்காயம் குறைவாகவே உள்ளன. உருளைக்கிழங்கு விலை ஒரு வருடத்தில் 92 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ .45 ஆக உள்ளது. இது 11 ஆண்டுகளில் மிக உயர்ந்தசராசரி விலை. வெங்காயத்தின் விலை 44 சதவிகிதம் உயர்ந்தது. அக்டோபர் கடைசிவாரத்தில் விலை ரூ.80 ஆக உயர்ந்தது.மத்திய அரசால் பணவீக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடியவில்லை. தில்லியில் தக்காளியின் விலை 50-80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. விலை
கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை உள்ளது. கொத்தமல்லி ரூ.200, பூண்டு ரூ.150, பச்சை மிளகாய் ரூ.50. உத்தரப்பிரதேசம் பிரயாகராஜில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ரூ.80.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டாணி மற்றும் பயறு வகைகள் மிக உயர்ந்த விலை.அதிக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்தியஅரசு அனுமதித்திருந்தாலும், ஜனவரிமாதத்தில் இது சந்தையில் பிரதி பலிக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் வர்த்தகர்கள் 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தனர். தீபாவளிக்கு முன்பு மேலும் 25,000 டன் இறக்குமதி செய்யப்படும். அரசு நிறுவனமான நாபெட் தலைமையிலும் இறக்குமதி செய்யப்படும். 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யவும், கலால் வரியை 10 சதவிகிதம் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.