tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 118 கோவிட் நோயாளிகள் வெளியில் இருந்து வந்தோர் 104; குணமடைந்தது 42 பேர்

திருவனந்தபுரம், ஜுன் 29- கேரளத்தில் ஞாயிறன்று புதிதாக 118பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 68பேர் வெளிநாடுகளில் இருந்தும் 36 பேர் இதர  மாநி லங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்பு கள் மூலம் 14 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 42 பேர் ஞாயிறன்று குண மடைந்தனர். இதுவரை 2150 பேர்  குணமடைந்துள்ள னர். தற்போது 2015 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். பல்வேறு மாவட்டங்களில் 1,75,734 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,73,123 பேர் வீடுகள்/ நிறுவன கண்காணிப்பிலும், 2611  பேர் மருத்துவ மனைகளிலும் உள்ளனர். ஞாயிறன்று 335  பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.         ஞாயிறன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 5406 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை வழக்கமான மாதிரி, பெரிதாக்கப்பட்ட மாதிரி, சென்டினல் மாதிரி, சி.பி. நாட் மற்றும் ட்ரூ நாட் உட்பட மொத்தம் 2,20,821 மாதிரிகள் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளன.அதில் 4041 மாதிரிகளின் முடிவுகள் நிலு வையில் உள்ளன. மேலும், சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலா ளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 45,592 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 43,842 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. ஞாயிறன்று மேலும் 13 தீவிர நோய் பரவல் பகுதி (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டது. தற்போது கேரளம் முழுவதும் 124 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.