tamilnadu

img

இதுவரை இல்லாத அளவாக 118 கோவிட் நோயாளிகள்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இதுவரை இல்லாத அளவாக வெள்ளியன்று 118பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 67 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 45பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.தற்போது 1380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சிகிச்சை பெற்று வந்தவர்களில் 96 பேர் வெள்ளியன்று குணமடைந்தனர்.

இதுவரை சிகிச்சையில் இருந்தவர்களில் 1,509 பேர் குணமடைந்துள்ளனர். வெள்ளியன்று காலை வரை 24 மணி நேரத்தில் 4889 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை 1,30,358நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3186  மாதிரிகளின் முடிவு நிலுவையில் உள்ளன.  மேலும், சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 36,051 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 34,416 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,73,729 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,32,569 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,30,655 பேர் வீடுகள்-நிறுவன கண்காணிப்பிலும் 1914 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். வெள்ளியன்று 197 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளியன்று மேலும் 7 தீவிர நோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. 3 பகுதிகள் தீவிர நோய் பரவல் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. தற்போதுகேரளம் முழுவதுமாக 112 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.இத்தகவல்கள் கேரளசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;