tamilnadu

img

கென்யாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பள்ளி குழந்தைகள் பலி

மேற்கு கென்யாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில், கூட்ட நெரிசலில் சிக்கி பள்ளி குழந்தைகள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கென்யா தலைநகர் நைரோபியின் வடமேற்கில் உள்ள ககமிகா நகரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது தி்டீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;