tamilnadu

img

வாக்காளர்களை மிரட்டிய குஜராத் எம்எல்ஏ!

அகமதாபாத், ஏப்.16-குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் மது ஸ்ரீவஸ்தவா. இவர், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி,வதோதராவில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, ‘அனைவரும் பாஜக-வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு’என்று வாக்காளர்களுக்கு, ஸ்ரீவஸ்தவா பகிரங்க மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், மதுஸ்ரீவஸ்தவா பேசிய இந்தப் பேச்சு குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் விசாரணை நடத்திய, வதோதரா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷாலினி அகர்வால், அதனடிப்படையில் ஸ்ரீவஸ்தவாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஸ்ரீவஸ்தவா அந்த நோட்டீசுக்கு திருப்தியான பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீவஸ்தவாவை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.

;