அகமதாபாத், மே 24- குஜராத்தில் உள்ள காடிலா பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்த மான நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்துவிட்டதாக காடிலா நிறுவனம் சனிக்கிழமை தெரி வித்துள்ளது. இறந்தவர்கள் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் துறைகளில் பணி யாற்றிவர்கள் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே மாத தொடக்கத்தில், தோல்கா வில் உள்ள பார்மா நிறுவனத்தின் உற் பத்திப் பிரிவின் குறைந்தது 26 ஊழி யர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.