அகமதாபாத்:
குஜராத் மாநிலம், டோராஜி பகுதியைச் சேர்ந்தவர் சலீம் சாதர். இவர் கடந்த ஜனவரியில் ஒரு கன்றுக்குட்டியை திருடி, தனது மகளின் திருமணத்துக்காக அதனை வெட்டி, அசைவ உணவு சமைத்ததாக கூறி கைதுசெய்யப்பட்டார். இந்தவழக்கில், கன்றுக்குட்டியை கொலை செய்த சலீம்சாதருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, டோராஜி மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.