குஜராத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4-வது முறையாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தொழிற்துறைகள் முடக்கப்பட்டது. இந்த சூழலில் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் வட மாநிலங்களுக்கு நடந்து செல்வது, லாரி மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளிலும், உணவு, தண்ணீர் இன்றியும் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த 20 வயதுடைய புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், வேலையிழப்பு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.