tamilnadu

கோளாறுகளான வாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி, ஏப்.19-கிருஷ்ணகிரி - ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட 8 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாரு காரணமாக இரவு 8.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது இயந்திக் கோளாறு காரணமாக, மகரிஷிபால வித்யா மந்திர் பள்ளி வாக்குச்சாவடியில் காலையில் 7.40 க்கே வாக்குப் பதிவு துவங்கியது. காமராஜ் காலனி சாவடியில் திமுக வேட்பாளர்சத்யா சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார்.அதே போல், அதிமுக, அமமுக வேட்பாளர்களும் 40 நிமிடம் காந்திருந்து வாக் களித்தனர். இது போல தேர் பேட்டையிலும் தாமதம் ஏற்பட்டது.அதிமுக வேட்பாளர் குடியிருப்புக்கு 4 கி.மீ. தூரத்தில் உள்ள பாகலூர் பகுதி சின்னமுத்தாலியில் சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இயந்திரம் சரி செய்யப்பட்ட பின் டோக்கன் கொடுக்கப்பட்டு சுமார் 300 பேர் இரவு 8.30 வரை வாக்களித்தனர்.

;