கிருஷ்ணகிரி, செப்.23- கிருஷ்ணகிரி மாவட்டம் 2004 பிப்ரவரியில் ஊத்தங்கரை வட்டம் உருவான பின் அரசு மருத்துவமனை சிறிது முன்னேற்றம் இருந்தாலும் மக்கள் தொகைக்கும், வட்ட வளர்ச்சிக்கும் நோய்கள் தாக்குதலுக்கும் ஏற்ப, எக்ஸ்ரே, மருத்துவ பரிசோதனை வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார வசதிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. இன்னும் ஆரம்ப சுகாதார நிலைய அளவிலேயே உள்ளது என பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் கூறுகிறார்கள். எக்ஸ்ரே எடுக்கும் இயந்திரம் உள்ளது. ஆனால் 2003 முதலே அதற்கான நிரந்தர ஊழியர் போடப்படாமல் 3 மாதம் 6 மாதம், என தொகுப்பு ஊதிய முறையில் மாவட்டத்தில் ஏதாவது ஒரு அரசு சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்கள். இங்கு போடப்படுவதாகவும், தினக்கூலி என்பதால் அந்த ஊழியர்களும் சம்பள பற்றாக்குறை உடல் நலக்குறைவு காரணமாக வருவதே இல்லை. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக எக்ஸ்ரே தனி அறை இருந்தும் சிறிதும் பயன்படவில்லை. அது போலவே ரத்த, சிறுநீர், சோதனைகளுக்கும் நிரந்தர பரிசோதகர்கள் போடப்படவில்லை. இங்கு பரிசோதிக்கப்படுவதும் இல்லை. ஆனால்இங்கு வரும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, மற்றும் பரிசோதனைகளுக்கும் அரசு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படு கிறது. ஏழை மக்கள் கடனை வாங்கி தனியார் எக்ஸ்ரே, பரிசோதனை கூடங்களுக்கு செலவு செய்து வருகிறார்கள். இந்நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் சமூக ஆர்வளர்களும், அரசியல் கட்சியினரும் கணக்கில்லாத முறைகள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால் அரசு மருத்துவத்துறை மாவட்ட நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடனும், மருத்துவமனையில் பணிபுரியும் சிலராலும் உள்ளூர் தனியார் எக்ஸ்ரே, பரிதோனை நிலையங்கள் சம்பாதிக்க வழிவகுத்துள்ளதாக சமூக ஆர்வளர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சுத்தம் செய்யாத கழிப்பறைகள், பராமரிப்பபு இல்லாமல் திறந்தே கிடப்பதால் துற்நாற்றத்துடன் வியாதிகளை உருவாக்கும் கூடமாக மாறியுள்ளதை சீர்ப்படுத்தி நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நோயாளிகள் மற்றும் உதவியாளர் கள் காத்திருப்புக்காக ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளதை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், எக்ஸ்ரே, பரிசோதனை கூடத்திற்கு நிரந்தர ஊழியர்கள் நியக்கமிக்க வேண்டும், வறுமையான ஏழை நோயாளிகளை தனியாரிடம் அடகு வைப்பதை தடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.