tamilnadu

img

முன்மாதிரி குஜராத் ஊசிப்போய் துர்நாற்றமடிக்கிறது

ஆசைப்பட்ட பண்டம் ஊசிபோன கதையாக

கள்ளக்குறிச்சி, மே 15 - இந்தியாவின் முன்மாதிரியாக சங்பரி வாரத்தின் ஊது குழல்களால் முன்மொழி யப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு பிழைப்புக்கு சென்ற தமிழக தொழிலாளர்கள், உணவு கிடைக்கவில்லை, தமிழ்நாட்டிற்கு வர உத வுங்கள் என கண்ணீர் மல்க கதறும் வீடியோ  வைரலாகி வருகிறது.

கண்ணீர் காணொளி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  வெங்கலம், தானம், அதையூர், பழையசெறு வக்கூர், சாத்தப்புத்தூர், தியாகை பிருதிவி மங்கலம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாசார், பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்க ளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத் மாநி லம் ராஜ்கோட் மாவட்டத்தில் கட்டிட வேலைக்காக சென்றுள்ளனர். ஊரடங்கு அமலாக்கப்பட்டதால், வேலை  இன்றி, சொந்த ஊருக்கு வர வழி இல்லாமல்  அவதிப்பட்டு வருவதாகவும், சாப்பாடு கூட இல்லாமல் பெண்கள் குழந்தைகளுடன் தவித்து வருவதாகவும் பதிவிட்ட வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரல் ஆனது.

களத்தில் சிபிஎம்

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை தொலைபேசி மூலம் குறிப்பிட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசியதில் அங்கு 32 பேர் சிக்கி உள்ளது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் விவ ரத்தை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யருக்கு மனு அனுப்பினார். இதனையடுத்து தமிழக அரசின் ஆன்லைன் திட்டத்தில் இவர்க ளின் பெயர்கள் பதிவிடப்பட்டுள்ளன.

ஊசிப்போன பண்டம்

இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலம் எனக்  கூறி “ராமாயணத்தின் மாயமான் போல” மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சி தொடர்ந்து ஏழை, எளிய மக்களை வஞ்சித்து வருவது, இப்படிப்பட்ட தொடர்  நிகழ்வுகள் மூலம் அம்பலமாகி வருகிறது. “ஆசைப்பட்ட பண்டம் ஊசி போன கதை யாக” முன்மாதிரி குஜராத் ஊசிப்போய் துர்நாற்றமடிக்கிறது.