திருப்பூர், அக். 12 – திருப்பூர் மாநகராட்சி 14ஆவது வார்டு அணைப்பாளையம் பகுதியில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு குடி யிருப்புகளைச் சூழ்ந்து கழிவுநீர் தேங்கி நின்றதால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் இருந்து அணைப்பாளையம் பகுதி யைக் கடந்து ஆண்டிபாளையம் நொய்யல் பாலத்தின் வழியாக மங்க லம் சாலைக்குச் செல்வதற்கு பாதை உள்ளது. ரயில்வே பாலத்திற்கு அரு கில் அமைந்துள்ள அணைப்பாளை யம் குடியிருப்புப் பகுதியில் கழிவு நீர் வடிகால் உள்ளது. மிகவும் தாழ் வான பகுதியாக, நொய்யல் ஆற்றங் கரைக்கு அருகில் இந்த குடியிருப்பு அமைந்துள்ள நிலையில் மழைக் காலங்கள் உள்பட பல்வேறு சம யங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புப் பகுதியில் தேங்கு வது வழக்கமான சம்பவமாக உள்ளது. நகரின் வடபகுதியில் உள்ள குடி யிருப்புகளில் இருந்து கழிவுநீரும், மழைநீரும் வடிகாலில் தேங்குவதால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து சுகா தார சீர்கேடான சூழலில் வாழ வேண்டி யிருக்கிறது.
இந்நிலையில் வெள்ளியன்று அணைப்பாளையத்தில் ரயில்வே பாலத்தின் தென்பகுதி குடியிருப்பு களில் வடிகாலில் கழிவுநீர் நிரம்பி குடியிருப்புகளின் வாசல்கள், வீதி களில் பெருமளவு தேங்கி இருந்தது. இதனால் துர்நாற்றமும், பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் தொல்லையும் ஏற்பட்டு பொது மக்கள் அவதிப் பட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழ்நிலையில் இப்பகுதியில் தேங்கி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்த கழிவுநீரை வெளியேற்றவும், வடிகாலில் அடைப்பை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரினர். இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி பணியாளர்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து அடைப்புகளை நீக்கி கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற் கொண்டனர்.
தற்காலிகமாக இப்பிரச்சனை யைத் தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தாலும் அணைப்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் தொடர் கதையாக உள்ளன. குறிப்பாக அணைப்பா ளையத்தில் இருந்து ஆண்டிபாளையம் மங்கலம் சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் ஏழை, எளிய தொழிலாளர்கள் வாழக்கூடிய இந்த குடியிருப்புப் பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி இல்லை. சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெருக்கடி, குறுகலான பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் காற்று மாசுபாடு, கழிப்பிடமின்மை என பல நெருக்கடிகள் உள்ளன. இந்த அனைத்துப் பிரச்சனைகளுக் கும் தீர்வு காணவும், நிரந்தரமாக அடிப் படை வசதிகளை நிறைவேற்றி அவ் வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(ந.நி)