tamilnadu

தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு மையம்

கிருஷ்ணகிரி, மே 6-மாவட்ட தனியார் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் ஒருவர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்,வாகனங்களில் மாணவ மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். அதிக வேகமாக ஓட்டக் கூடாது. அனைத்து வாகனங்ககளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும். வாகனங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். பெண்கள் மாணவிகள் கழிவறைகளில் எப்பொழுதும் பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பள்ளி கட்டுமான வசதிக்கேற்ப மட்டுமே மாணவர்கள் சேர்க்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கேட்டுக்கொண்டார்.

;