உதகை, ஜூன் 16- குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப் பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சரகத்திற்கு உட்பட்ட சிம்ஸ் பார்க் அருகில் உள்ளது ஆப்பிள் பி சாலை. இங்குள்ள தனியார் குடி யிருப்பு ஒன்றில் 8 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டி உள்ளது. இப்பகுதி வழியாக உணவு தேடி வந்த காட்டெருமை ஒன்று திடீரென தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலகட்ட முயற்சிக்கு பின்னர் பொக்லைன் இந்திரம் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் தொட் டியில் விழுந்த காட்டெருமையை உயிரு டன் மீட்டனர்.