கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் மத்திகிரி பகுதியில் உள்ள நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு நிழல்கள் அறக்கட்டளை மூலம் நாப்கின்களை பெற்று வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் கண்மணி, மாதர்சங்க செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா, மஞ்சுளா, ஜெயந்தி, நித்யாஸ்ரீ, புனிதா, மேகலதா, வினோதா, கோவிந்தம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.