tamilnadu

பெண்ணை கடத்திய ஊர்க்காவல் படை வீரர்

கிருஷ்ணகிரி,மே 29-துடுக்கான ஹள்ளியை சேர்ந்த ராஜாவின் மகள் சந்திரமதி (24) பொறியியல் பட்டதாரி. இவர் கிருஷ்ணகிரி தனியார் கணினி பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரித்ததில் பச்சிகாணப்பள்ளியில் உள்ள ஊர்க் காவல் படையை சேர்ந்த 29 வயது கலைமணி ஏமாற்றி கடத்திச் சென்றதாக தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரை கேஆர்பி அணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.