tamilnadu

img

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீ வைப்பு!

கிருஷ்ணகிரி, மார்ச் 7 -

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி, சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, மர்ம நபர்கள் சிலர் டயர் மாலை அணிவித்து, தீ வைத்துள்ளனர். 
இதனையடுத்து, இன்று காலை இதை பார்த்த அப்பகுதி மக்கள், டயர்களை அகற்றி, தீயை அணைத்தனர்.
மேலும், இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய கோரி,  பெரியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

;