கிருஷ்ணகிரி, ஜூன் 13- பால் உற்பத்தியாளர்க ளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய 11 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், லிட்ட ருக்கு 5 ரூபாய் உயர்த்தி பசும்பாலுக்கு 40 ரூபாயும், எருமைபாலுக்கு 50 ரூபாயும் வழங்க வேண்டும், 50 விழுக் காடு மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும், பொது முடக்க காலத்தை பயன்ப டுத்தி தனியார் தீவன தயா ரிப்பாளர்கள் மூட்டைக்கு 300 ரூபாய், 400 ரூபாய் என உயர்த்தி கொள்ளையடிப் பதை தடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி ஆவின் பால் ஒன்றியம் தனியார் முத லாளிக்கு பால் வழங்கியதில் ரூ.2.5 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இறுதி யில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி, செய லாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் மதன், சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.