tamilnadu

மாற்றுத்திறனாளி மீது காவல் ஆய்வாளர் தாக்குதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 6- கிருஷ்ணகிரி மாவட்டத் தின் கடைசியில் மலை களுக்குள் கர்நாடகா எல்லை யில் உள்ளது அஞ்செட்டி வட்டம். இங்குள்ள அண்ணா சாலையில் 30 ஆண்டுகளுக் கும் மேலாக டீ கடை நடத்தி  வரும் முகமது சபீர் ஒரு கை  செயலிழந்த மாற்றுத்திற னாளி. கடந்த 2 மாதங்களாக  கொரோனா பொதுமுடக்கத் தால் டீ கடை திறக்காததால் வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கே வழி இல்லா மல் தவித்து வந்தது அவரது  குடும்பம். சில தினங்களுக்கு முன்பு அனைத்து கடைக ளும் திறக்கப்பட்ட போது இவ ரும் கடையை திறந்தார். அப்போது அங்கு வந்த  அஞ்செட்டி காவல் ஆய்வா ளர் ரவிகுமார் முகமது சபீர் டீ கடைக்கு வந்து மீண்டும் கடை திறந்துள்ளாயா என்னை வந்து பார்த்தாயா? என மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 4ஆம் தேதி மீண்டும் சபீர் கடைக்கு வந்து  கடையை திறக்கக்கூடாது என மிரட்டி லத்தியால் முதுகி லும் கைகளில் தாக்கி யுள்ளார். இதில் மயங்கி  விழுந்த முகமது சபீரை அரு கில் இருந்த்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமைனையில் சிகிச்சைக்காக அனும தித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட முகமது சபீர் தேன்கனிக்கோட்டையில் உள்ள மாவட்ட காவல்  துணை கண்காணிப்பாபாள ரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், எல்லோ ரும் கடைகளை திறந்து நடத்துவதால் நானும் டீ கடையை திறந்து நடத்தி வருகிறேன். அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரவி குமார் சில நாட்களுக்கு முன்பு வந்து என்னை கடையை மூடு என  மிரட்டி னார். அடுத்த நாள் வந்து  மாமூல் கேட்டு என்னை கடு மையாக லத்தியால் தாக்கிய தால் மயக்கமடைந்து விழுந்தேன். அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டேன். இவர் ராமர் கோவில் கிராமத்தில் உள்ள சில பேரின் உதவியுடன் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்து வருகிறார். நான் மாமூல் தராததால் என்னை கடுமையாக தாக்கிய காவல் ஆய்வாள் ரவிகுமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.