tamilnadu

img

காலமானார்

மன்னார்குடி:முத்துப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினரும் நகரச் செயலாளருமான தோழர் சி.செல்லத்துரையின் தாயார் சி.பட்டம்மாள் புதன்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 97. அவரது இறுதி நிகழ்ச்சிகள் முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்றன. நீண்ட நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர் சிகிச்சைகள் பலனின்றி முத்துப் பேட்டையில் அவரது இல்லத்தில் காலமானார். செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் முத்துப்பேட்டைக்கு வந்து பட்டம்மா ளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  அவருடன் ஒன்றியச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி. மெரீனா ஆறுமுகம், மூத்த தோழர் ஏ.காளிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சிக் கிளை செயலாளர்கள், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே. முருகையன், நகர செயலாளர் கே.மார்க்ஸ், திமுக நகர செயலாளர் எம்.எஸ்.கார்த்தி, ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் டி. சீனிவாசன், மாவட்ட செயலாளர் முனியன், தமுஎகச செயலாளர் கோவி. ரெங்காமி, மூத்த குடிமக்கள் பேரவையின் நகர செயலாளர் கே. நடராஜன், தமிழ் இலக்கிய மன்ற தலைவர் நா. ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அவரது இறுதி ஊர்வலத்தில் சர்வ கட்சித் தலைவர்கள், பல்வேறு வெகுஜன அமைப்பின் உறுப்பினர்கள், நகர பொது மக்கள் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.