tamilnadu

img

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: விவசாயத் தொழிலாளர்கள் ஆவேசம்

கிருஷ்ணகிரி, மார்ச் 10- மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நடந்துள்ள ரூ. 287 கோடி  மோசடியை கண்டித்தும் நீண்ட  காலமாக குடியிருக்கும்  ஊத்தங் கரை, சிங்காரபபேட்டை காப்டேரி, காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி, பகுதி விவசாயத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டும், இல வச வீட்டு மனை வழங்க வலி யுறுத்தியும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்  பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி கோரிக் கைகளை விளக்கிப் பேசினார்.  திருவண்ணாமலை மாவட்டத் தில் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து ஊழல் முறைகேடுகள் நடப்பதை தடுக்க, உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு மாவட்டத் தலைவர் பி. கண பதி தலைமை தாங்கினார்,  மாநில துணைத் தலைவர் பி. சுப்பிரமணி,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.  சிவக்குமார் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அ.கோதண்டம், மாவட்டச் செயலாளர் கே.சுந்தர மூர்த்தி, பொருளாளர் கே.உலக நாதன், கரும்பு வெட்டும் தொழிலாளர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆயிரக்க ணக்கான பெண்கள் உள்ளிட்ட தொழி லாளர்கள் பங்கேற்ற தொடர் முழக்கப் போராட்டம் மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமை யில் நடைபெற்றது. மாநிலச் செயலா ளர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி.ஏழுமலை, மாநி லக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இறுதியாக மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.  கடலூரில் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் மாநிலச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவர் எஸ்.கே. ஏழு மலை, ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.