கிருஷ்ணகிரி, ஜூன் 18- கிருஷ்ணகிரி அருகே பர்கூர் செட்டிப் பள்ளியில் நடந்த ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு பெங்களுருவிலிருந்து வந்த 80 வயது மூதாட்டியால் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியது. அவர் இம்மாதம் 14ஆம் தேதி பலியானார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு சென்னை சென்று திரும்பியவருக்கும் கிருஷ்ணகிரி துப்புரவு ஆய்வாளருக் கும், ஓசூர் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 13 பேர் மாவட்டத் தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.