கிருஷ்ணகிரி,நவ.24- தேன்கனிக்கோட்டை யில் ஓசூர் சாலையில் கிழக்குப் பகுதியில் உள்ளது அம்பேத்கர் நகர். இங்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. அம்பேத்கர் நகர் மற்றம் சுற்றுப்புற கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து செல்கின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்ப தால், கட்டிடத்தின், சிமெண்ட் சீட் கூறை உடைந்தும், மேலும் கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தின் ஒரு மூலையில் பெரிய எலி பொந்து உள்ளது. குழந்தைகள் இருக்கும்போதே எலிகள் ஜாலியாக சுற்றித் திரி கின்றன. பூச்சிகள், பாம்பு களின் கூடராமாகவும் இந்த அங்கன்வாடி மையம் உள்ளது. குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும், யாருமே பயன்படுத்த முடியாத ஒரு கட்டிடமாக அங்கன்வாடி மையம் காட்சியளிக்கிறது. இப்படி முற்றிலுமாக சிதைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை கல்வித் துறை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்ற னர். அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் தினமும் வந்து செல்வதால் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும், கழிப்பிடம், குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இல்லை என்றால் உடனடி யாக அங்கன்வாடி மைய த்தை வேறு தரமான கட்டிட த்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்ய வில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கட்சி யின் வட்டச் செயலாளர் வெங்கடேஷ் தெரிவித்து ள்ளார்.