இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வித மான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுக ளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட் டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் வெள்ளி யன்று தொடங்கியது. டாஸ் வென்ற விண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங் கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத் தது.
இந்த டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக பணிபுரி யும் விண்டீஸ் அணியின் முன் னாள் கிரிக்கெட் வீரர் விவி யன் ரிச்சர்ட்ஸ் கள நிலவ ரங்கள் குறித்த ஆய்வு செய்து (வர்ணனை) கொண்டிருந்த போது வெப்பம் தாங்காமல் மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உணவு இடைவேளையின் போது மீண்டும் வர்ணனைப் பணியைத் தொடர்ந்தார்.
மயங்கி விழுந்தது குறித்து விவியன் ரிச்சர்ட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,”உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் குணம டைந்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது வர்ணனைப் பணியை மீண்டும் தொடர்கிறேன். பந்துவீச்சாளர்களால் செய்ய முடியாததை இயற்கை செய்து என்னைச் சாய்த்து விட்டது. இயற்கையை நாம் மதிக்க வேண்டும்” என்று நகைச்சுவையுடன் பதிவிட்டி ருந்தார். ஜமைக்கா நகரில் மழைக் கான அறிகுறி இருந்தாலும் காலையிலேயே 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப் பம் கொளுத்துகிறது. விவி யன் ரிச்சர்ட்ஸ் மயக்கத்திற்கு இதுதான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.