tamilnadu

img

அம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடி தோனிக்கு சிக்கல்

பிரபல கட்டுமான நிறுவனமான அம்ராபாலி பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தராமல் ஏமாற்றிவிட்டதாகப் பொதுமக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் நிதி மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய தணிக்கை குழு நியமிக்கப்பட்டது.  குறிப்பாக அம்ராபாலி நிறுவனத்தின் பெயரில் மட்டும் வழக்கு தொடராமல் அந்த நிறு வனத்தின் விளம்பர தூதராக உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனியின் பெயரையும் சேர்த்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தணிக்கை குழு தனது ஆய்வை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தணிக்கை அறிக்கையில், “அம்ராபாலி நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய நிதி மோசடி செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தணிக்கை அறிக்கையால் தோனி யின் மனைவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தோனியின்  மனைவி ஷாக்‌ஷி, அம்ராபாலியின் துணை நிறுவனமான அம்ராபாலி மகி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ள தால் அவரையும் மோசடி வழக்கு  விசார ணைக்கு உச்சநீதிமன்றம் விரைவில் அழை க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோந்து பணியில் தோனி

பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள
தோனி 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் பணியாற்றும் ராணுவ குழுவினருடன் ரோந்து பணிக்கு செல்ல ராணுவம் உத்தரவிட்டுள்ளது.