tamilnadu

img

மூன்றாவது டெஸ்ட் போட்டி : தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழந்து தடுமாற்றம்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 224 ரன்களுக்கு 3 இழந்து காணப்பட்டது. இந்நிலையில் தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய கேப்டன் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.   
 

;