சையத் முஷ்டாக் அலி டி-20
நாட்டின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான சையத் முஷ் டாக் அலி டி-20 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் “பி”யில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது இறுதிக்கட்ட லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரான சூரத்தில் புதனன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழக பந்துவீச்சாளர்களான சித்தார்த் (4 விக்.,), வாஷிங்டன் சுந்தர் (3 விக்.,) ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய ஜார்க்கண்ட் அணி 18.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 120 பந்து களுக்கு 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி ஷாருக்கான் (24), வாஷிங்டன் சுந்தர் (38) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து அபார வெற்றியுடன் அரை யிறுதிக்கு முன்னேறியது. வரும் 29-ஆம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொட ர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி சூரத்தில் இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன. சமீ பத்தில் நிறைவுபெற்ற விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப்போட்டியின் போது மழையால் கர்நாடக அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்த தமிழக அணி, தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டி-20 கோப்பை யைக் கைப்பற்றத் தீவிர பயிற்சியுடன் அரையிறுதிக்குத் தயாராகி வருகிறது.