tamilnadu

img

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் சுனில் ஜோஷி!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிக்கு, இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சுனில் ஜோஷியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய மதன்லால், ஆர்.பி. சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர் சிங் ஆகிய ஐந்து பேரை இறுதி செய்தனர்.

இவர்களிடம் மும்பையில் இன்று நேர்காணல் நடத்தினர். நேர்காணல் முடிந்த பின்னர் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சுனில் ஜோஷியை தேர்வு குழு தலைவர் பதவிக்கும், முன்னாள் வீரர் ஹர்விந்தர் சிங்கை உறுப்பினர் பதவிக்கும் பரிந்துரை செய்துள்ளது. ஏறக்குறைய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.