tamilnadu

img

ஸ்ரீசாந்தின் தடைக் காலம் குறைப்பு  இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

கேரளத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சா ளர் ஸ்ரீசாந்த் (36) 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக் காக விளையாடிய போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  வாழ்நாள் தடை பெற்றார். அவ ருடன் அஜித் சண்டிலா, அங்கித சவான் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்பட்டது.   அஜித் சண்டிலா, அங்கித சவான் தண்ட னையை ஏற்று வேறு துறையில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஸ்ரீசாந்த் மட்டும் தனி ஒருவராகப் போராடிக் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் தண்டனை காலத்தைக் குறைக்க அனுமதி பெற்றார்.  இந்நிலையில், ஸ்ரீசாந்தின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாக பிசிசிஐ குறைப்ப தாக அறிவித்துள்ளது. ஸ்ரீசாந்தின் தடைக் காலம் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் (13.09.2013) என்பதால் அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் அவரின் தடைக்காலம் முடிவுக்கு வரு கிறது.  இதனால் விரைவில் இடம்பிடிப்பார் என கேரள ரசிகர்கள் மீம்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏனென்றால் தற்போது ஸ்ரீசாந்திற்கு 36 வயதாகுகிறது. தண்டனை காலம் முடிவதற்குள் 37 வய தை எட்டிவிடுவார். வயது பிரச்ச னை  ஒருபக்கம் இருந்தாலும் பந்துவீச்சில் மட்டும் திறமை வாய்ந்தவர். பேட்டிங் பற்றிக் கண்டுகொள்ள மாட்டார்.  பந்துவீச்சு துறையை உற்று நோக்கினால் ஷமி, உமேஷ், புவனேஸ்வர், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களுடன் இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. மேலும் இளம் வீரர்கள் சூப்பர் பார்முடன் இந்திய அணியில் இடம்பிடிக்க முன்பதிவுடன்  ஐபிஎல் மற்றும் ரஞ்சி, துலிப் போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகின்றனர். தீபக் சாஹர், நவதீப் சைனி, கலீல் அஹமது, ஷர்துல் தாக்குர்,   சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ராகுல் சாஹர் போன்ற இளைஞர்கள்  அடுத்த தலைமுறைக்குத் தயார் நிலையில் இருப்பதால் இந்திய அணியில் ஸ்ரீசாந்திற்கு இடம் கிடைப்பது சிரமமான காரியம் தான்.