tamilnadu

img

தென் ஆப்பிரிக்க வீரருக்கு 5 ஆண்டு சிறை

கிரிக்கெட் சூதாட்டம் 

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குலாம் போடி கடந்த 2015-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் தொடரில் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சிக்கினார். துரித நட வடிக்கையில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஆண்டு தடை விதித்தது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரி யம் நடவடிக்கை எடுத்தாலும் இந்த விவகாரம் வழக்காக மாறி பிரிட்டோரியா நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தது. குலாம் போடி மீது 8 வித மான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்ட நிலை யில், பிரிட்டோரியா நீதிமன்றம் சனியன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி குலாம் போடிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்துள்ளது.      இந்தியாவில் பிறந்தவரான குலாம் போடி (46) தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.