tamilnadu

img

நவ்தீப் சைனி மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை

வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் வெளிப்படுத்தியதால் சைனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அறிமுகம் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நிக்கோலஸ் பூரனை வீழ்த்தினார். அப்போது ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, தன்மீதான தவறை நவ்தீப் ஒப்புக்கொண்டார். இதனால் ஐசிசி அவருக்கு தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியை வழங்கியுள்ளது.
 

;