tamilnadu

img

அசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ரத்து

குடியுரிமை மசோதா போராட்டம் எதிரொலி 

குடியுரிமைத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  ஜனாதிபதி ஒப்புதலுக்காக இந்த மசோதா காத்திருக்கிறது. அதன் பின்பு தான் இது சட்டமாகமுளைக்கும்.   இந்த குடியுரிமை மசோதாவுக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் மக்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வங்கதேச நாட்டின் உள்பகுதி எல்லை மாநில மான திரிபுராவிலும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சொந்த நாட்டில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு ராணுவத்தை அனுப்பிவைத்துள்ள நிலையில், அசாம், திரிபுராவில் அடுத்து நடைபெற விருக்கும் நாட்டின் முதன்மையான உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  அசாம், திரிபுரா மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள இந்த ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் வேறு மாநிலத்துக்கு மாற்ற  தற்போதைக்கு எவ்வித திட்டமும் இல்லை என அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் தெரிவித்துள்ளன.