தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 தொடரின் 4-வது சீசன் வெள்ளியன்று தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சென்னை சேப்பாக் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஓவரில் (சேசிங்) அஸ்வினின் பந்துவீச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் அணி வெற்றி விளிம்பில் இருந்த பொழுது சேப்பாக் அணிக்கு கடைசி 2 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்நேரத்தில் அஸ்வின் ஒரு கையை மட்டும் அசைத்தவாறு (இடது கையை சுழற்றாமல்) பந்துவீசினார். இந்த முறை கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டது இல்லையென்றாலும் தொடரை நடத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் பற்றி கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால் புகார் ஏதெனும் வந்தால் அஸ்வினுக்கு சிக்கல் உறுதி. சமீபத்தில் நிறைவு பெற்ற ஐபிஎல் தொடரில் ‘மான்கட்’ முறை ரன்-அவுட் உத்தியைப் பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.