tamilnadu

img

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது.  கேஎல் ராகுல் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும், மணிஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் கப்தில் 66 ரன்களும், நிகோல்ஸ் 80 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் சேர்க்கவே, 48 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 300 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. போட்டி நாயகனாக நிகோல்ஸும், தொடர் நாயகனாக டெய்லரும் அறிவிக்கப்பட்டனர்.