tamilnadu

img

சிக்கலில் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹஷின் ஜஹான் கடந்த ஆண்டு தனது கணவர் பல பெண்களுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளதாகக் கூறி ஷமியின் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் அந்தரங்க சாட்டிங் (குறுஞ்செய்தி) விஷயங்களை சமூக வலைத்தளத்தில் கசியவிட்டார். இந்த நிகழ்வு நடந்த அடுத்த நாட்களில்,”முகமது ஷமியும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், ஷமியின் குடும்பத்தார் தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த வழக்கு விசாரணை அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கில் ஆஜராகாத முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது இருவரும் அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.  ஷமி உலகக்கோப்பை மற்றும் விண்டீஸ் தொடரைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடித்தார். இவ்விரண்டு தொடர்களும் தற்போது நிறைவு பெற்ற நிலையில், ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஷமி உள்ளார். அடுத்த கிரிக்கெட் தொடர் (தென் ஆப்பிரிக்கா தொடர்)  தொடங்க இன்னும் 14 நாட்கள்  உள்ள நிலையில், ஷமி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா இல்லை வழக்கம் போல தண்ணிகாட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

;