tamilnadu

img

ஐபிஎல் 2019 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மொஹாலியில், நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5-வது வெற்றியை பெற்றது.

மொஹாலியில் நேற்று ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இப்போட்டியில், ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாம் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ராகுல் 52 ரன்களும், கெய்ல் 30 ரன்களும், மில்லர் 40 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து, 183 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.


;