இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக்கொண்ட டி-20 தொடரின் 2-வது ஆட்டம் கேரள மாநில தலைநகர் திரு வனந்தபுரத்தில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில்(ஹைதராபாத்) மேற்கு இந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிக்ஸர் விளாசி செக் புக்கில் கையெழுத்திடுவது போல் “நோட்புக் சைகை” வெளிப்படுத்தி னார். போட்டி நிறைவடைந்தவுடன் இது பற்றி விவரித்த கோலி,”நான் மேற்கு இந்தியத் தீவுகள் மண்ணில் விளை யாடிய பொழுது எனக்கு கெஸ்ரிக் வில்லியம்ஸ் “நோட்புக் சைகை” கொடுத்தார். அதற்கு தற்போது பதிலடிகொடுத்துள் ளேன்” எனக் கூறினார். இந்த பிரச்சனை இதோடு நின்று விடும் என எதிர்பார்த்த நிலையில், திருவனந்தபுரம் டி-20 ஆட்டத்தில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து “வாயை மூடுங்கள்” எனச் சைகை மூலம் ஸ்லெட்ஜிங் செய்து பதிலடி கொடுத்தார். கெஸ்ரிக் வில்லியம்ஸின் சைகையால் விராட் கோலியின் கண்கள் சிவந்தது போன்று காணப்பட்டது.
அது என்ன “நோட்புக் சைகை”
ஐபிஎல் தொடரைப் போன்று மேற்கு இந்தியத் தீவுகள் பகுதியில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 லீக் தொடரில் தான் ஆட்டமிழக்க வைத்த வீரரிடம் நேராகச் சென்று செக் புக்கில் கையெழுத்திடுவது போல் கையில் எழுதி சைகை மூலம் உற்சாகத்தை வெளிப்படுத்துவார். இந்த ஸ்லெட்ஜிங் மூலம் கரீபியன் தொடரில் பல்வேறு சண்டை சச்சரவுகள் அரங்கேறிய நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் தொடரில் நோட்புக் சைகையை கெஸ்ரிக் துவக்கி வைத்துள்ளார்.