tamilnadu

img

சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஜடேஜா எச்சரிக்கை

முக்கியமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் வீரர்களை வர்ணனையாளர்களாக நியமிப்பது வழக்கம். பரபரப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் மரபு மீறி வார்த்தைகள் மூலம் கலகத்தை உண்டாக்கி வருகின்றனர். இதில் முன்னணியாக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர். இவர் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தைகளும் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவைப் போலச் சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.    கடந்த பிப்ரவரி மாதம் தோனியின் ஆட்டத்திறன் குறித்து கடுமையாக விமர்சித்தார். முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் போர்க்கொடி தூக்க சில நாள் பொட்டிப்பாம்பாக அமைதியாக இருந்தார்.  இந்நிலையில் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரிலும் தனது சர்ச்சை இன்னிங்ஸை ஆரம்பித்துவிட்டார். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்  ஜடேஜாவை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில்,”ஜடேஜா ஒரு துக்கடா வீரர். நான் கேப்டனாக இருந்தால் அணியிலேயே சேர்க்க மாட்டேன்” என கூறியுள்ளார்.  இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஜடேஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் விளையாடியதை விட இரு மடங்கு நன்றாக விளையாடிவிட்டேன். தற்பொழுதும் அதே மாதிரியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறேன். சாதனைப் படைத்தவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். வயிற்றுப் போக்கைப் போன்ற உங்கள் வார்த்தைகளை நான் கேட்டது போதும்” என எச்சரிக்கையுடன் பதிலடி கொடுத்துள்ளார்.   சொந்த விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தியே வர்ணனை செய்வதால்  சஞ்சயை வர்ணனையாளர் பொறுப்பிலிருந்துநீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் ஐசிசி -யிடம் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.