tamilnadu

img

ஐபிஎல் ஏலம் வீரர்களின் பட்டியல் வெளியீடு

உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது  சீசன் ஏப்ரல்  மாதம் (2020) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ஆம் தேதி மேற்கு வங்க  தலைநகர் கொல்கத்தாவில் நடை பெறுகிறது. ஏலத்துக்கு முன்பு 8 அணிகளும் 71 வீரர்களை விடுவித்து 127 பேரைத் தக்க வைத்துக்கொண்டன. மேலும் 2020 சீசன் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், வீரர்களின் திறமை மற்றும் அணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் எண் ணிக்கை 332 ஆகக் குறைக்கப்பட்டுள் ளது. 332 வீரர்களில் இதுவரை சர்வ தேச கிரிக்கெட்டில் விளையாடாத 19 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள் ளார்கள். இந்த 332 வீரர்களிலிருந்து 73 வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்யவுள்ளன. இந்த 73 வீரர்களில் 29 வீரர்கள் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.