ஐபிஎல் தொடரில் விராட் கோலி கேப்டனாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கும், மூன்று முறை இறுதிக்கும் முன்னேறியுள்ள பெங்களூரு அணி ஒருதடவை கூட கோப்பையைக் கையில் ஏந்தியது கிடையாது. நடப்பு சீசனில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் வீரர்கள் முதல் பயிற்சியாளர் வரை என அனைத்தி லும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இறுதியாக லோகோவின் வடிவத்தை மாற்றி அதிர்ஷ்டத்திற்காக ஏங்கி வருகிறது.